புங்குடுதீவில் வாள்வெட்டு குடும்பஸ்தர் ஒருவர் காயம்.

ஆசிரியர் - Admin
புங்குடுதீவில் வாள்வெட்டு குடும்பஸ்தர் ஒருவர் காயம்.

புங்குடுதீவு - 7ஆம் வட்டாரப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். சிவபாலன் சிறிகாந் வயது(37) என்பவரே காயமடைந்தவராவார். ஐவர் கொண்ட குழுவினர் இவரை பொல்லால் தாக்கியும் வாளாள் வெட்டியும் காயம் விளைவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிகக்ப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த நபர் தன்னை தாக்கிய நபர்கள் தொடர்பில் ஊர்கவற்துறை பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலதிக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு