தும்பளையில் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்!
பருத்தித்துறை- தும்பளையில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தும்பளை கிழக்கைச் சேர்ந்த தெ.யதுசன் (வயது – 31) என்பவரே காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் விசாரணை நடக்கிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.