நாவந்துறை மரியன்னை ஆலயத்தில் சிலுவை பாடுகள் சிற்ப தொகுதி திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
நாவந்துறை மரியன்னை ஆலயத்தில் சிலுவை பாடுகள் சிற்ப தொகுதி திறந்துவைப்பு..

நாவாந்துறை  மரியன்னை ஆலயத்தில்      வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று (29) முற்பகல் 10 மணியளவில் ஆலய பங்குத் தந்தையினால்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இச் சிற்பங்களை தென்னிலங்கையைச் சேர்ந்த சகோதரமொழி சிற்பக்கலைஞர் M.Y.Koojana Obris மற்றும் அவரது உதவியாளர்களும் இவற்றை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்துள்ளனர். 

 இத்  தேவாலய சூழலில் 14 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும்  இஜேசுவின்  சிலுவைத்துன்பங்களை எடுத்தியம்புகின்றன. இந்த சிலைகளை இங்கிருந்து புலம்பெயர்ந்து வாழும்  ஒருவரின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஒரு சில சிலைகளின் வேலைகள் முழுமையடைந்துள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.  ஏனையவையை விரைவில் மிகவும் அழகுற நேர்த்தியானமுறையில் வர்ணம் பூசப்பட்டு வேலைகள் நிறைவடையவுள்ளன.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு