வலி.கிழக்குப் பிரதேச சபை உபதவிசாளருக்கு கொலை மிரட்டல்!

ஆசிரியர் - Admin
வலி.கிழக்குப் பிரதேச சபை உபதவிசாளருக்கு கொலை மிரட்டல்!

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுப் பின்னர் வலி. கிழக்குப் பிரதேச சபையின் உப தவிசாளராகத் தெரிவான மகேந்திரலிங்கம் கபிலனுக்கு இன்று வெள்ளிக்கிழமை(27) பகல் தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான அவர் இந்தவிடயம் தொடர்பாக அவர் உடனடியாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,சபையின் கன்னி அமர்வின் போது பயிற்றோலை வீதியின் வெள்ளநீர் வாய்க்கால் அமைப்பினைச் சீர் செய்வது தொடர்பாக சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சில தனிப்பட்ட நபர்கள் அதிருப்தியடைந்ததாகவும். 

இதுவே கொலை மிரட்டலுக்கான காரணமெனத் தான் சந்தேகிப்பதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட வலி.கிழக்குப் பிரதேச சபையின் உபதவிசாளர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு