ஐனாதிபதியின் காரணங்களை ஏற்க நாம் தயாரில்லை...

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியின் காரணங்களை ஏற்க நாம் தயாரில்லை...

தமிழ் அரசியல் கைதிகளை நிச்சயமாக வி டுதலை செய்வேன் என ஐனாதிபதி உறுதி யாக கூறுகிறார். ஆனால் தடையாக உள்ள காரணங்கள் சிலவற்றை அவர் கூறுகிறார் அவற்றை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பி ன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தி ல் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

இதன்போத தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளி க்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சில தினங்களுக்கு முன்னர் நான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அப்போது சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தவிதமான மற்றமும் இல்லை. ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தடையாக உள்ள சில காரணங்களை கூறியிருந்தார். அந்த  காரணங்கள் ஏற்றுக்  கொள்ளகூடியவையாக இல்லை. 

ஆனாலும் இந்த அரசாங்கத்தை கொண்டே அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். வெறும னே ஆனந்த சுதாகரனை மட்டுமல்லாமல் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற் சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கணவனும் மனைவியும் தடுத்துவைக்கப்பட்ட மனை 17 வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 

கணவன் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றார். இவர்களுi டய பிள்ளைகள் 17 வருடங்களாக பெற்றோருடன் வாழவில்லை. இப்படி ஒவ்வொரு அரசியல் கைதிக்கு பின்னாலும் ஒவ்வொரு துயரம் நிறைந்த கதை உள்ளது. இதேபோல் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டi மப்புடன் சில விடயங்களை விரைவில் பேசவுள்ளதாக அறிந்து கொண்டோம். அதில் அரசியல் கைதிகளின் விடுதலையும் உள்ளடக்கம். 

ஆகவே தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதன் ஊடாக அரசியல் கைதி களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு