யாழில் பாடசாலை நூலகங்களைத் தரமுயர்த்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

ஆசிரியர் - Admin
யாழில் பாடசாலை நூலகங்களைத் தரமுயர்த்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

வடக்கு மாகாணக் கல்வியமைச்சிற்குட்பட்ட பாடசாலை நூலகங்களைத் தரமுயர்த்தும் செயற்திட்டத்திற்கமைய நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(25) முற்பகல் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

வோர் சையிட், ஐரோப்பிய ஒன்றியம், அரிமா கழகங்களின் இணை அனுசரணையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வின் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வியமைச்சிற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளுக்குப் பெறுமதியான நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச். எம்.பெளசி, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு