சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

ஆசிரியர் - Editor I
சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

தென்மராட்சி பிரதேச  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதலை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவற்குழியில் கடந்த வெள்ளிக்கிழமை  வெளிக்களப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். 

தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர்,  சாவகச்சேரி  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடமையின் போது உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்தும் அவர் மீது தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் விரைவான    விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுமே சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு