யாழில் தூக்கிட்டு உயிரிழந்த மாணவன்: காரணம் இதுதான்!

ஆசிரியர் - Admin
யாழில் தூக்கிட்டு உயிரிழந்த மாணவன்: காரணம் இதுதான்!

யாழ். நீர்வேலியில் தூக்கிட்ட நிலையில் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை(23) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

குறித்த மாணவனின் பெற்றோர் கொழும்பில் வசித்து வருகின்றனர். மாணவன் தனது பேர்த்தியாருடன் நீர்வேலியில் வசித்து வருகிறார். ஜி. சி. ஜி சாதாரண தரத்தில் கற்று வரும் மேற்படி மாணவன் திறமை மிக்க ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட குறித்த மாணவனின் தாயார் க. பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்காகத் தான் நீர்வேலிக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணையைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நீர்வேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் துவாரகன்(வயது- 15) என்பவரே உயிரிழந்தவராவார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு