வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமானார்!
வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி தமது 68ஆவது வயதில் காலமானார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கட்கிழமை) இரவு காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இடம்பெறுமென குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.