“கோல்டன் குளோப்” விருதுக்கு ஜெய்பீம் தேர்வு!!

ஆசிரியர் - Editor II
“கோல்டன் குளோப்” விருதுக்கு ஜெய்பீம் தேர்வு!!

கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட சூர்யா நடித்து அநேகரின் வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பீம் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியது. பொலிஸ் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு என்பவரை பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. 

இதில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் சட்டத்தரணியாக நடித்திருந்தார். அப் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகளும் எழந்திருந்தன. இந்த நிலையில் தற்போது ஜெய்பீம் திரைப்படம் அடுத்த ஆண்டு அமெரிக்கா நாட்டில் நடைபெற இருக்கும் ‘கோல்டன் குளோப்’ விருது விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சர்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கோல்டன் குளோப் விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ஜெய்பீம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு