வல்லை வீதியில் விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்பு – மயக்கம் நீக்கி வழிபாடு!!
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி வழிபாடு செய்து அதன் மயக்கத்தைப் போக்கினர் பக்தர்கள்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை வல்லை நாகதம்பிரான் ஆலய வீதியில் நடந்துள்ளது.
வீதியை நாகபாம்பு கடக்க முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி அது காயமடைந்தது. அதைக் கண்டவர்கள் பாம்மை நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து பாலூற்றி அதன் மயக்கத்தைப் போக்கினர். பின்னர் அந்தப் பாம்பை வழிபட்டனர்.
பாம்பு மயக்கம் நீங்கி அங்கிருந்து அகன்றது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.