யாழ். நீர்வேலியில் மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டியும் மோதி கோரவிபத்து

ஆசிரியர் - Admin
யாழ். நீர்வேலியில் மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டியும் மோதி கோரவிபத்து

யாழ். நீர்வேலியில் அமைந்துள்ள வலி. கிழக்குப் பிரதேச சபையின் நீர்வேலி உப அலுவலகத்திற்கு அருகில்  மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டியும் மோதி கோரவிபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் காயமடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை அறிய முடியவில்லை.

விபத்து இடம்பெற்ற பகுதியில் உணவுப் பொதியொன்று சிதறிக் கிடப்பதுடன் இரத்தத் துகள்களும் காணப்படுகின்றன.

குறித்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸார் இன்னமும் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு