பளை அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

ஆசிரியர் - Admin
பளை அரசர்கேணி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்துசீமெந்திலான கொங்கிறீட் கட்டிடம் தென்பட்டுள்ளது.

சந்தேகம் கொண்ட காணி உரிமையாளர் அருகில்இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்றஇராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழி என்பதனை உறுதி செய்துள்ளனர்.

குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி அழத்துக்கு நிலமட்டத்தில் இருந்துகீழ் செல்வதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு