சைக்கிள் - ரிப்பர் மோதி விபத்து - இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
யாழ்ப்பாணம் ஆனைப்பந்நி சந்திக்கருகில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனைபந்தி சந்திக்கருகில் இன்றிரவு 9.30 மணியளவில் டிப்பர் வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மிக ஆபத்தான நிலையில் யாழ். போதான வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் யாழ்.பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.