கும்பாபிசேகத்தின் போது ஆலய கலசத்துக்கு மாலை எடுத்து வந்த 'ட்ரோன்'!
சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்றுகாலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரையிலான சுபநேரத்தில் சிறப்புற நடைபெற்றது.
இந்த கும்பாபிசேகத்தின் போது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம், மாலை எடுத்து வரப்பட்டு தூபி கலசத்துக்கு அணிவிக்கப்பட்டது.