தலைக்கவசம் அணியாதவரை ஏற்றிச் சென்ற சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ஆசிரியர் - Admin
தலைக்கவசம் அணியாதவரை ஏற்றிச் சென்ற சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

தலைக்கவசம் அணியாத மூதாட்டியை மோட்டார்ச்சைக்கிளில் ஏற்றிச் சென்ற மூதாட்டியின் சகோதரன் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கெதிராகச் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வரணி இயற்றாலைப் பகுதியிலிருந்து கொடிகாமம் பகுதி நோக்கி தனது சகோதரனுடன் குறித்த மூதாட்டி மோட்டார்ச் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கொடிகாமம் நகரை அண்டிய பகுதியில் வீதியில் காணப்பட்ட பள்ளத்தில் மோட்டார்ச் சைக்கிள் சில்லு இறங்கியதில் மூதாட்டி கீழே விழுந்தார்.

இதன் போது தலைக்கவசமின்றிப் பயணித்தமையால் மூதாட்டி தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேயிடத்தைச் சேர்ந்த கனகசிங்கம் வேலாயுதபிள்ளை என்பவரே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மூதாட்டியின் சகோதரன் கைது செய்யப்பட்டார். கைதான சகோதரன் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதன் போது அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு