படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்த இந்திய மீனவரின் சடலம் காரை நகரில் கரை ஒதுங்கியது..!

ஆசிரியர் - Editor I
படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்த இந்திய மீனவரின் சடலம் காரை நகரில் கரை ஒதுங்கியது..!

கடல் சீற்றம் காரணமாக கடலில் தவறி விழுந்து காணாமல்போன இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் இன்று திங்கட்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து காணாமல்போயிருந்தார். 

குறித்த மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியதாக அறியக் கிடைத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு