யாழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது திடீர்த் தாக்குதல்
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரொருவர் மீது பொதுமகன் நடாத்திய திடீர்த் தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்.நாவற்குழிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பகுதியில் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்ட வேலைகளைப் பார்வையிடச் சென்றபோது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது தகாத வார்த்தையில் கூறி உத்தியோகத்தரை தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
இதன்போது காயமடைந்த உத்தியோகத்தரை சில பொதுமக்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.