வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

ஆசிரியர் - Admin
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

யாழ். வலி-வடக்குப் பகுதியில் கடந்த -13 ஆம் திகதி இராணுவத்தினரால் பொதுமக்களின் பாவனைக்கென விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மேற்படி பகுதிக் கிராம அலுவலர்களிடம் உடனடியாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பழைப் பிரதேச செயலர் எஸ். சிவஸ்ரீ தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கில் ஜே- 240, தென்மயிலை, ஜே-246, மயிலிட்டி வடக்கு, ஜே- 247 தையிட்டி கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் கட்டுவன் மயிலிட்டி வீதிக்கு மேற்குப் பக்கமாகவுள்ள காணிகள் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டிருந்தன.

குறித்த காணிகளைத் துப்பரவு செய்தல் மற்றும் காணிகளில் வெட்டிய மரங்களை அகற்றுதல் தொடர்பாகப் பிரதேச செயலகத்தின் அனுமதியைப் பெற்று அகற்றுமாறும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படத் தவறுவோருக்கு எதிராகப் பொலிஸார் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு