புத்தாண்டு சுபநேர அலுவலகப் பணி; வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் நிகழ்வு

ஆசிரியர் - Admin
புத்தாண்டு சுபநேர அலுவலகப் பணி; வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் நிகழ்வு

சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வும் இரவு விருந்துபசாரமும் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) நடைபெற்றது.

மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சிவமோகன் யாழ்பபாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் அரசியல் தண்டனை கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஆளுநரால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

அவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் ஏஸ்கே மீடியா நிறுவனம் (டான்) மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு