நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்!

ஆசிரியர் - Admin
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்!

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் புதிதாக அமைக்கப்படும்  கட்டடங்கள் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களால் ஏகமனதான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு சபைச் சபா மண்டபத்தில் இன்று (18.04.2018) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

அங்கு சட்டவிரோத கட்டங்கள் தொடர்பில் எவ்வாறான முடிவினை மேற்கொள்வது என தவிசாளரால் உறுப்பினர்களிடம் கேட்கப்பட்போது விவாதங்களின் பின்னர். சபையின் ஒப்புதலின்றி புதிதாக சட்டவிரோதமாக முறையில் கட்டங்களை அமைக்கவேண்டாம் என மக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும். அதனை மீறி சட்டவிரோதமாக கட்டிடங்களை மக்கள் அமைக்க முற்படுகின்றபோது அவற்றை ஆரம்ப நிலையிலேயே இடித்தழிப்பது என்றும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு