ஆர்வத்துடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற யாழ்.பட்டதாரிகள்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் நேர்முகத் தெரிவுக்காக அழைக்கப்பட்ட யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இன்று புதன்கிழமை(18) காலை யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய நேர்முகத் தேர்வு தொடர்பில் யாழ். மாவட்ட அராசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் எமது செய்தியாளர் வினாவிய போது,
இன்று காலை முதல் மாலை-06 மணி வரை இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் 322 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஐந்து பிரிவுகளாக நேர்முகத் தெரிவு இடம்பெறுவதாகவும், தொடர்ச்சியாக அழைக்கப்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்குமான நேர்முகத் தேர்வு இடம்பெறுமென அவர் கூறியதாகவும் மேலும் தெரிவித்தார்.