வடமாகாண ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர முதல்வர்..

யாழ் மாநகர மேயர் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை சந்தித்து கலந்துரையுள்ளார்.

இன்று  (18) முற்பகல் 10.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. 

சந்திப்பின்போது யாழ் மாநகரத்தினை அழகு படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

மாநகரக அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தேவை ஏற்படின் கோரிக்கையினை முன்வைக்குமாறும் மாநகர மேயர் ஆனோல்டை ஆளுநர் கேட்டுக்கொண்டார். 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு