யாழில் மன்னார்ச் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை!

ஆசிரியர் - Admin
யாழில் மன்னார்ச் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்குத் தனது பெற்றோர்களுடன் வருகை தந்த மன்னாரைச் சேர்ந்த சிறுமி இனிப்பு என எண்ணிப் பூச்சி முட்டையைச் சாப்பிட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவர் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்குத் தனது பெற்றோருடன் குறித்த சிறுமி வருகை தந்துவிட்டு நேற்று(16) பிற்பகல் மன்னார் நோக்கிப் பேருந்தில் சென்றுள்ளார். 

இதன் போது சிறுமியின் பெற்றோர் எடுத்துச் சென்ற பொதியில் இனிப்புக்களுடன் பூச்சி முட்டைகளும் இருந்துள்ளது. இந்நிலையில் இனிப்பென எண்ணி மேற்படி சிறுமி பூச்சி முட்டைகளையும் சாப்பிட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் விடயத்தை அறிந்ததையடுத்து பெற்றோர் பேருந்தை இடைநிறுத்தி தமது மகளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

குறித்த சம்பவத்தில் மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த மு. சுபீட்சா(வயது-06) என்ற சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு