வலி,வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திருடர்கள்....

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திருடர்கள்....

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாடும் சம் பவங்கள் இடம்பெற்று வருகிறது.

வலிகாமம் வடக்கில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் இரும்பு வியாபாரிகள் மற்றும், மரங்களை களவாடுபவர்கள், வீட்டு தளபாடங்களை களவாடும் நபர்கள் மக்களின் காணிகளுக்குள் புகுந்து வருகின்றனர்.

நேற்றய தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மரங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இதனையடுத் து இன்று மயிலிட்டி மக்கள் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு