வலி. வடக்கு மக்களுக்கு யாழ்.அரசாங்க அதிபர் கூறிய இனிப்பான செய்தி

ஆசிரியர் - Admin
வலி. வடக்கு மக்களுக்கு யாழ்.அரசாங்க அதிபர் கூறிய இனிப்பான செய்தி

வலி. வடக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்களின் 683 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (12) பிற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கமைய பொன்னாலை,பருத்தித்துறை,காங்கேசன்துறை ஆகிய வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நாளை- 13 ஆம் திகதி காலை- 06 மணி முதல் இரவு- 07 மணிவரை போக்குவரத்துப் பயணத்தினை மேற்கொள்ளமுடியும்.

கட்டுவன் மேற்குப் பகுதியிலுள்ள மயிலிட்டி வடக்கு,மயிலிட்டி துறை,தையிட்டி,தென்மயிலை ஆகிய நான்கு கிராம சேவையாளர்கள் பிரிவில் உள்ள காணிகள்  இவ்வாறு கையளிக்கப்படவிருக்கின்றன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேலும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு