பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை..

ஆசிரியர் - Editor I
பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை..

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சில் உள்ள வெற்றி டங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறும் என யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான ஊடகவியாளர்கள் சந்திப்பு இன்று மாலை யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மாவட்ட செயல் மேலும் கூறுகையில்,

பட்டதாரிகளாக இருக்கின்ற யாராவது கடிதம் பெறாத நிலையில் இருக்கின்றவர்கள் கூட மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள்ள பதிவுகளை மேற்கொண்டு அதற்கான கடிதங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

இது வரை 3004 பட்டதாரிகள் பதிவுகள் செய்யப்பட்டு இருக்கின்றனர்.புதிதாக 403 பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் முதற்பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு 20 ஆம் திகதிக்கு முன்பதாக நேர்முகதேர்வு இடம்பெறும் அதன் பின்னர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு எதிர்வரும் 20 திகதி பின்னர் நேர்முக தேர்வுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படும். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு