குருநகர் கடற்பரப்பி - இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் - பொலிஸில் முறைப்பாடு

ஆசிரியர் - Admin
குருநகர் கடற்பரப்பி - இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் - பொலிஸில் முறைப்பாடு

யாழ்ப்பாணம், குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போனமை தொடர்பில் யாழ். பொலிஸநிலையத்தில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்களின் உறவினர்களால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென் றதாகவும் இதுவரையில் கரைக்குத் திரு ம்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் நேற்று முன்தினம் தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டதுடன் தமது படகு பழுதடைந்துள்ளதாகவும், தம்மை உடனடியாக மீட்கு மாறும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக குறித்த இட த்திற்குச் சென்ற மீனவர்களின் உறவினர் கள் அவர்களது படகினை மட்டுமே கண்டெடுத்துள்ளதாகவும், குறித்த மீனவர்களைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசார ணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மீனவர்களை மீட்கும் பணிக ளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.      

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு