"தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்" யாழ்.மாநகர சபையின் கன்னி உரைகளில்

ஆசிரியர் - Admin

யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் கன்னி உரை ஆற்றிய சில உறுப்பினர்கள் தமது உரை யின் இறுதியில் ''தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வாசக த்தை உரத்து கூறி தமது உரையை நிறைவு செய்திருந்தனர். 

யாழ்ப்பாண மாநகர சபையின் கன்னி அமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.

இதில் உறுப்பினர்கள் உரையாற்றுவத ற்கு 3 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது அங்கு உரையாற்றிய சில உறுப்பினர்கள் தமது உரையின் இறுதியில் “தமிழர் தாகம் தமி ழீழ தாயகம்" என்ற வாசகத்தை உரத்து கூறி யிருந்தனர். அதற்கு ஏனைய உறுப்பினர்கள் கைகளை தட்டி வரவேற்றிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு