சாவகச்சேரியில் நீண்டகால சட்டவிரோத செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி!
யாழ்.சாவகச்சேரி நகரின் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அருகில் நீண்ட காலமாக அனுமதியின்றிச் சட்ட விரோதமான முறையில் மாடுகளை வெட்டி அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் இன்று புதன்கிழமை (11) சாவகச்சேரி நகரசபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைக்குச் சென்றபோது அங்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி வெட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதனைச் சுகாதார அதிகாரிகள் அவதானித்தனர். இதனையடுத்து இறைச்சிக் கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் குறித்த கட்டடத்துக்குத் தற்காலிகச் சீலும் வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பொதுச்சுகாதாரப் பிரிவினர், சாவகச்சேரிப் பொலிஸார் ஆகியோர் குறித்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.