வடக்கு முதல்வர் பதவிக்கு டக்ளஸ் தேவானந்தாவும் போட்டி!
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது.
இந்தநிலையிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென நான் நம்புகிறேன்.எனவே, எனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.