வலி.வடக்கில் காணி விடுவிப்பு உறுதியானது!
யாழ்- வலி. வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் எதிர்வரும்-16 ஆம் திகதி விடுவிக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
யாழ். மயிலிட்டி உள்ளிட்ட நான்கு கிராம அதிகாரி பிரிவுகளிலுள்ள காணிகளே யாழ். மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேற்படி காணிகளை விடுவிப்பதால் பாதுகாப்பில் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படுமா? என மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வலி.வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட காணிகளின் வரைபடங்கள் இன்னமும் தமக்கு அனுப்பப்படாதா காரணத்தால் காணி விடுவிப்பு நடைபெறுமா? என்பது சந்தேகமே என யாழ். மாவட்டச் செயலக அதிகாரிகள் முன்னதாக கருத்துக்கள் வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.