நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ள எச்சரிக்கை! இரு வாரங்களில் நிலமை மோசமாகலாம்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ள எச்சரிக்கை! இரு வாரங்களில் நிலமை மோசமாகலாம்..

நாட்டில் அடுத்துவரும் 2 வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். என எச்சரித்திருக்கும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, 

தற்போதைய நிலைமை தொடர்பில் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வௌியேறுமாறும் பொருத்தமான முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து வகையான முகக்கவசங்களும் இக்காலத்திற்கு பொருந்தாது என வைத்தியர்களும் விசேட நிபுணர்களும் கூறுகின்றனர். கொவிட் நோயாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மிக வேகமாக பரவக்கூடிய பிறழ்வு நாட்டிலுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.உலக நாடுகள் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை கொவிட் ஒழிப்பு தேசிய செயலணி என்ற வகையில் முன்னெடுத்துள்ளோம். எனினும், பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே 

நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முடியும்என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, முழுமையாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் அதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

அனைவரையும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லையென்றால் சிற்சில இடங்களுக்கு செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம். நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், சில இடங்களுக்கு செல்லும்போது 

தடுப்பூசி அட்டைகளை பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் உருவாகக்கூடும். செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு