புத்தாண்டு தினத்தில் காணிகள் விடுவிக்கப்படுவது சந்தேகம்..
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வ லயத்திற்குள்ளிருந்து 700 ஏக்கர் நிலம் புத் தாண்டு தினத்தில் விடுவிக்கப்படும். என இராணுவம் கூறியிருந்தபோதும் இராணு வத்திடமிருந்து விடுவிக்கப்படும் காணிக ளுக்கான வரைபடம் கிடைக்கவில்லை. எ ன மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ்.வந்த இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க பு த்தாண்டு பரிசாக யாழ்.மக்களுக்கு வலிகா மம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு ள்ளிருந்து ஒரு தொகை காணிகள் மக்களி டம் மீள வழங்கப்படும் என கூறியிருந்தார்.
இதற்கமைய 700 ஏக்கர் காணி மீள மக்களி டம் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினு ம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவ த்திடமிருந்து வரைபடங்கள் கிடைக்கப்பெ றவில்லை என கூறும் மாவட்ட செயலக வ ட்டாரங்கள்.
கட்டுவனிலிருந்து – மயிலிட்டிச் சந்தி வரையிலான பிரதான வீதியில், சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் முன்னரங்க வேலிகள் இந்த வீதியில் அகற்றப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் இந்த வீதியும், இதன் மேற்குப் புறமாகவுள்ள காணிகளும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். பாதுகாப்புத் தரப்பினரின் உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்காமல் எதனையும் உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்றும் மாவட்ட செயலக தகவல் கள் கூறுகின்றன.