பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? பரபரப்பை ஏற்படுத்தும் இந்திய ஊடகம்...

ஆசிரியர் - Editor I
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? பரபரப்பை ஏற்படுத்தும் இந்திய ஊடகம்...

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இ ருக்கிறார் என சந்தேகிப்பதாக இந்தியாவின் பிரவல ஊடகம் ஒன்று செய்தியினை வெளி யிட்டிருக்கின்றது. 

தென்னிந்திய நடிகர் ஆர்யா நடத்திவரும் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் யாழ்ப்பாணத் தை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாக ரன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. என குறித்த இந்திய ஊடகம் தனது செய்தி யில் குறிப்பிட்டுள்ளது. 

நடிகர் ஆர்யா நடத்திவரும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்ளும் பெண்களின் வீடுகளுக்கு ஆர்யா சென்று வருகின்றார்.

இவ்வாறு ஆர்யா யாழ்.அனலைதீவில் உள்ள சுசானாவின் வீட்டிற்கு அண்மையில் சென் று வந்திருக்கின்றார். இதன்போதே சுசானாவின் உறவினர் ஒருவர் போர்காலத்தில் இடம் பெற்றிருந்த கொரூரங்கள் பற்றி பேசியிருந்தார். 

இதன்போது தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்பகாலம் குறித்து தகவல்களை வெளியிட் டிருந்ததாகவும், அப்போது எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செல் தாக்குதல் நடத்தப்படும், இறந்தவர்களின் உடல்களை எரிக்க கூட நேரம் இருக்காது.

பின்னர் ஒன்றாக கொண்டு சென்று எரிப்போம். அவ்வாறு 30 பேரின் உடல்களை எரித்தோம் என கூறியுள்ளாதாகவும், செய்தி வெளியிட்டிருக்கும் இந்திய ஊடகம்,

தலைவர் ஆரம்பகாலங்களில் எங்கள் வீடுகளுக்கு வந்து செல்வார்.பின்னர் அவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன. அதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆனால் அதே ஊடகங்கள் வாயிலாக தான் உயிருடன் இருப்பதாக பிரபாகரன் அறிவித்தார்.  

அப்போது பிரபாகரனை பார்க்க சென்றபோது அவர் உண்மையானவரா அல்லது போலியா என சந்தேகம் உண்டாகியிருந்தது. 

அதனை உறுதி செய்யும் வகையில் பிரபாகரனுடன் நடந்த பழைய சம்பவங்களை நினை வுபடுத்திக் கொண்டார் என அந்த இந்திய ஊடகம் தனது செய்தியில் மேலும் கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு