யாழ்.மாநகர கழிவகற்றல் பொறிமுறையை பார்வையிட்ட மாநகர முதல்வர்
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் திண்மக்கழிவகற்றல் பொறிமுறை தொடர்பில் யாழ்.மாநகரசபை மேயர் இ.ஆர்னோல்ட் காக்கைதீவுக்கு இன்று நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளார்.
இமன்போது மேயர் ஆனோல்ட்டுடன் துணைமேயர் து.ஈசன் மற்றும் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
காக்கைதீவு கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நேரில் பார்வையிட்ட மேயர், கல்லுண்டாய் பகுதியில் திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் ஆலையையும் பார்வையிட்டுள்ளார்.