யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்

ஆசிரியர் - Admin
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 108 தேங்காய் உடைத்து விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களே மேற்படி போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தின் முன்னால் கற்பூரம் ஏற்றி 108 தேங்காய் உடைத்து போதனை சாரா ஊழியர்கள் விசேட வழிபாட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு