யாழில் நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பகுதிகள் விபரம்

ஆசிரியர் - Admin
யாழில் நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பகுதிகள் விபரம்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை -08.30 மணி முதல் பிற்பகல் -05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, சுழிபுரம், பத்தனை, கள்ளவேம்படி, காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படைமுகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம்(புதியது), பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு