ஈ.பி.டி.பியின் கோட்டையை கைப்பற்றிய த.தே.கூட்டமைப்பு
ஈ.பி.டி.பியின் கோட்டை என கூறப்பட்டுவந்த நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ்தேசிய கூட் டமைப்பு இன்று கைப்பற்றியுள்ளது.
நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் தெரிவும் 1வது அமர்வும் இன்றைய தினம் காலை உள்ளுரா ட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் நடைபெற்றது.
இதன்போது பிலிப் பற்றிக் ரொஸானை தமிழ்தேசிய கூட்டமைப்பு தவிசாளராக நியமித்தது. அ தேசமயம் ந.சசிக்குமாரை ஈ.பி.டி.பி கட்சி நியமித்தது.
இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் தமிழ்தேசிய கூட்ட மைப்புக்கு 7 வாக்குகள் கிடைத்தது. ஈ.பி.டி.பிக்கு 6 வாக்குகள் கிடைத்தது.
இதனடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிலிப் பற்றிக் ரொஸான் தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார்.