ஊறனி கனிஷ்ட வித்தியாலயம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு
படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கேசன்துறை ஊறனி கனிஷ்ட வித்தியாலயம் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(5) திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னையா சுரேஸ் ஆகியோர் இன்று பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.