வலி.வடக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்
வலி.வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு செயலக மண்டபத்தில் இன்று(5) நடைபெற்றது.
மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மீள்குடியேற்ற அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னையா சுரேஸ், அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.