தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் பிரதேசத்தின் கைத்தோழில் சார் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளும், ஆரம்பக் கைத்தொழிலமைச்சுப் பிரதிநிதிகளும், நெக்டா நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.