புதிய தையல் போதனாசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைத்த ஆளுநர்

ஆசிரியர் - Admin
புதிய தையல் போதனாசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைத்த ஆளுநர்

வடமாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட புதிய தையல் போதனாசிரியர்கள் ஐவருக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்றைய தினம்(05) நியமனக் கடிதங்கள் வழங்கி வைத்துள்ளார்.

யாழ்.சுண்டுககுளியிலுள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 8.30 மணி முதல் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் வடமாகாணப் பிரதம செயலாளர் பத்திநாதன், வடக்கு முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் ரூபினி வரதலிங்கம், கிராம அபிவிருத்தித் திணைக்களப் பதில் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு