இளைஞனைப் படுகாயப்படுத்திய நபர் தப்பியோட்டம்: நல்லூரில் பரபரப்பு

ஆசிரியர் - Admin
இளைஞனைப் படுகாயப்படுத்திய நபர் தப்பியோட்டம்: நல்லூரில் பரபரப்பு

டொல்பின் ரக வாகனத்தை வேகமாகச் செலுத்தி வந்த இனம் தெரியாத நபரொருவர் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மோதிப் படுகாயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் நேற்றுப் புதன்கிழமை (04) இரவு-11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் யாழ். பருத்தித்துறை வீதியூடாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அதேவீதி வழியாக வேகமாக டொல்பின் ரக வாகனத்தைச் செலுத்தி வந்த இனம் தெரியாத நபர் குறித்த இளைஞனைப் பின்புறமாக மோதியுள்ளார்.

சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளானார். எனினும், டொல்பின் வாகனத்தைச் செலுத்தி வந்த நபர் உடனடியாகவே அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் நல்லூர்ப் பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு