வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டது என வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

"முகம் சிதைவடைந்துள்ளதால் அடையாளம் காண்பது கடினம். மீட்கப்பட்ட சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கம்பர்மலையைச் சேரந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணுடையதாக இந்தச் சடலம் இருக்கலாம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

 எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு