யாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்

ஆசிரியர் - Admin
யாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்

யாழ்ப்பாணம்  தீவக பகுதிக்கு கடமைக்கு  செல்லும் அரச உத்தியோகத்தர் ஹோட்டலில் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இன்று(4) காலை 6:30 மணியளவில் அரச உத்தியோகத்தர்  தனது காலை உணவிற்காக யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டலில் இடியப்ப பாசல் ஒன்றை வாங்கிக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று தான் வாங்கிய   உணவு பார்சலை  திறந்த போது சாம்பாரில் தேள் ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த கடையில் சுகாதார பரிசோதகரால் குறித்த ஹோட்டல் சீல் வைக்கப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு