யாழ். இந்திய துணைத்தூதுவர் பாலசந்திரன் வடக்கு ஆளுநரைச் சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (02) மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதுவரை காலமும் பதவிவகித்த ஆ.நடராஜன் அவர்கள் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.