அடுப்புப் பற்ற வைத்த யாழ்.வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!

ஆசிரியர் - Admin
அடுப்புப் பற்ற வைத்த யாழ்.வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!

மண்ணெண்ணை ஊற்றி அடுப்பினைப் பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாகத் தீக்காயங்களுக்குள்ளான யாழ். ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 75 வயோதிபப் பெண்மணி சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபப் பெண்மணி கடந்த மாதம்-25 ஆம் திகதி மதியவேளையில் உணவு சமைப்பதற்காகத் தென்னம் ஓலையினை அடுப்பில் வைத்த பின்னர் மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார். 

இந்தச் சமயத்தில் குறித்த வயோதிபப் பெண்ணுக்குத் தெரியாமல் தென்னம் ஓலையூடாக வழிந்தோடி வந்த மண்ணெண்ணை வயோதிபப் பெண்மணியின் சட்டை மீது விழுந்துள்ளது. இதனை அறியாது அவர் அடுப்பினைப் பற்ற வைத்துள்ளார்.

அவ்வாறு பற்ற வைத்த தீ வயோதிபப் பெண்மணியின் உடல் மீது பட்டு உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண்மணி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 கடந்த ஒரு வார காலமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வயோதிபப் பெண்மணியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ். ஆனைக்கோட்டை சாவற்காட்டுப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சவுந்தலாதேவி(வயது-75) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு