யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரில் நாளை மின்தடை!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை (03) யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் முற்பகல்-01 மணி வரை யாழ். மாவட்டத்தின் மிருசுவில், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்ற்றத் திட்டம், 52 ஆவது இராணுவ முகாம், எழுதுமட்டுவாள், Tokyo cement ஆகிய பகுதிகளிலும்,

நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா பட்டானிசூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராயேந்திரகுளம் வரை, தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம், ஒமேகா லேன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, பட்டானிச்சூரிலிருந்து பம்பைமடு வரை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, நெளுக்குளம் நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார்ப் பிரதேசத்தின் ஒருபகுதி, கட்டையடம்பன், மளவராயர் கட்டையடம்பன் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு