புன்னாலைக்கட்டுவனில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ஆசிரியர் - Admin
புன்னாலைக்கட்டுவனில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் தோட்ட நிலப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(31) அதிகாலை ஒரேநாளில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தது. 

இந்தப் பகுதியில் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தருக்குச் சொந்தமான பல ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டார் இயந்திரம், நீர் இறைக்கும் இயந்திரம், மருந்து தெளிகருவி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தது.

தோட்டக் கிணறுகளுக்குள் விடப்பட்டிருந்த பைப்புக்களின் புட்பால்வுகளும் கொள்ளையர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு அருகிலுள்ள நிறுவனமொன்றைச் சூழவுள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரிவி கமராக்களில் கொள்ளையர்களின் முகங்கள் பதிவாகியிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் கொள்ளையர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த சி.சி.ரிவி கமராக்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு